/* */

மணப்பாறை போலீசில் பூசாரி மீது ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக புகார்

மணப்பாறை அருகே பச்சிலை தருவதாக கூறி ரூ.2 லட்சம் ஏமாற்றிய பூசாரி மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

மணப்பாறை போலீசில் பூசாரி மீது ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக புகார்
X

மணப்பாறை போலீஸ் நிலையம் (பைல் படம்)

திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சியைச் சேர்ந்த எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அந்த குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டன. இந்நிலையில் நரியம்பட்டியை சேர்ந்த பூசாரி ஒருவர் சாமி பார்ப்பதாகவும், குழந்தை பாக்கியத்திற்காக தன்னிடம் பச்சிலை மூலிகை உள்ளதாகவும் கூறினார். அதன்படி நான் நரியம் பட்டிக்கு சென்று சம்மந்தப்பட்ட பூசாரி யிடம் பச்சிலை மூலிகை வாங்கி சாப்பிட்டேன். தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்த நிலையில் வயிறும் கருத்தரித்தது போல் இருந்தது.

மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்து கொள்வதாக கூறியபோது சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது. மீறி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டால் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினார். இதனால் மருத்துவ பரிசோதனை. மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில் குழந்தை பிறப்பதற்காக மூன்று முறை தேதி கொடுக்கப்பட்ட நிலையில் மூன்று முறையும் தேதி கடந்ததோடு 12 மாதங்கள் ஆகிவிட்ட தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டபோது வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதுவரை ரூ. 2 லட்சம் செலவு செய்துள்ளேன்.

ஆகவே, சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  4. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  5. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  6. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  7. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  8. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  9. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  10. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்