/* */

காவிரி குடிநீர் குழாய் குதிக்கும் பணியில் வடமாநில தொழிலாளி சாவு

திருச்சி அருகே காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணியின்போது குழிக்குள் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

காவிரி குடிநீர் குழாய் குதிக்கும் பணியில் வடமாநில தொழிலாளி சாவு
X

கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து சிவகங்கை நோக்கி காவிரி குடிநீர் கொண்டு செல்வதற்கு பிரமாண்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பெரியமணப்பட்டி அருகே குழாய் பதிக்கும் பணியில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கவுதம் சவுகான் (வயது 30) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

அவர் மேலே நின்று பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக குழியில் தவறி விழுந்தார். அப்போது அவரது தலைப்பகுதி குழாய் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை சக தொழிலாளர் கள் மீட்டு சரக்கு வேனில் ஏற்றி அங்கும், இங்குமாக சுற்றியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் கவுதம் சவுகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  2. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  4. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  5. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  7. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  9. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  10. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...