கொரோனா பீதி, காகித ஆலை மூடக்கோரி ஊழியர்கள் போராட்டம்

மணப்பாறைஅருகே தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்படும் நிலையில் ஆலையை முடிடகோரி தொழிலாளர்கள் போராட்டம். நடத்தினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு காகித தொழிற்சாலையின் இரண்டாம் அலகு செயல்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகின்றது.

இதையறிந்த சில தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆலையின் நிரந்தர பணியாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆலை வாயில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்றால் ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஊரடங்கு காலம் முடியும் வரை ஆலையை மூட வேண்டும், சம்பளத்துடன் விடுப்பு வழங்கிட வேண்டும், கொரோனாவால் இறந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்,

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?