திருச்சி அருகே தூக்குபோட்டு விவசாயி தற்கொலை

திருச்சி அருகே தூக்குபோட்டு விவசாயி தற்கொலை
X
திருச்சி அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த .குரும்பபட்டியைசேர்ந்தவர் ராசு (வயது 43). விவசாயியான இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். நேற்று அவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story