/* */

வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது -2 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது -2 வாகனங்கள் பறிமுதல்
X

வையம்பட்டி காவல் நிலையம் (பைல் படம்).

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த வடக்கு அஞ்சல்காரன்பட்டி அருகே சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக வையம்பட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் மணல் அள்ளி டிராக்டரில் ஏற்றுவது தெரியவந்தது.

இதுதொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்ததுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட வடக்கு அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்ராஜ் (வயது 22), விக்னேஷ்வரன் (20), மூரம்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி (38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  3. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  10. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!