/* */

திருச்சி அருகே பிடிபட்ட 10 அடி நீள மலைபாம்பு: வனப்பகுதியில் விடுவிப்பு

திருச்சி மணப்பாறை அருகே விவசாயி கிணற்றில் பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைபாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி அருகே பிடிபட்ட 10 அடி நீள மலைபாம்பு: வனப்பகுதியில் விடுவிப்பு
X

பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த காதர்மைதீன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலத்தில் 40 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

இந்நிலையில் அந்த கிணற்றில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உயிருடன் இருப்பதை கண்டு காதர்மைதீன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த தகவலையடுத்து, துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Updated On: 10 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’