/* */

திருச்சி சமயபுரம் அருகே வீட்டிற்குள் பிணமாக கிடந்த வாலிபர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வீட்டிற்குள் பிணமாக கிடந்த வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி சமயபுரம் அருகே வீட்டிற்குள் பிணமாக கிடந்த வாலிபர்
X

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள அண்ணாநகர் மேட்டு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மாரிமுத்து (வயது 30). மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்துள்ளார். மாரிமுத்து கீழ்தளத்திலும், அவரது பெற்றோர் வீட்டின் மாடியிலும் குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலையில் மாரிமுத்து தங்கியிருந்த கீழ்தளத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத் தொடர்ந்து கதவை திறந்து பார்த்தபோது மாரிமுத்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வாசு தேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 4 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  3. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  9. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?