/* */

திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா

திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா
X

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றன. இன்று காலை சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கொண்டு ராஜகோபுர உச்சிக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அப்போது கோபுரம் மற்றும் கோவிலை சுற்றி நின்ற திரளான பக்தர்கள் மகமாயி மகமாயி என கோஷமிட்டனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இவ்விழாவில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, அறநிலைய துறை ஆணையர் சந்திரசேகரன், கூடுதல் ஆணையர் கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி,ஸ்டாலின் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் கோவில் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் அவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 July 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...