/* */

திருச்சி அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
X

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள செங்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மனைவி வள்ளி (வயது 40). இவர், நேற்று அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளி கூச்சலிட்டதைத்தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து ஒருவனை பிடித்தனர். பின்னர் அவனை மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் தெற்கு சித்தாம்பூரை சேர்ந்த 16 வயது சிறுவன் என்றும், அவன் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் பதுங்கி இருந்த பூபாலன் (19) என்பவரை பிடித்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து முக்கால் பவுன் தாலி சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 17 Nov 2021 8:04 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...