சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை 2-வது நாளாக எண்ணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை 2-வது நாளாக எண்ணிக்கை
X

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி இரண்டாவது நாளாக நடந்தது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை இரண்டாவது நாளாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பிரசித்திப் பெற்ற கோயிலாகும்.இந்த கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்று 2-ம் நாளாக எண்ணினர்.

அப்போது கடந்த 14 நாட்களில் பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ. 59 லட்சத்து 32 ஆயிரத்து 318 ரொக்கமும், 583 கிராம் தங்கமும், 1 கிலோ 050 கிராம் வெள்ளியும், 32 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றது என்று கோயிலின் இணை ஆணையர்செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
the future of ai in healthcare