/* */

பாதயாத்திரை சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பக்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பாதயாத்திரை சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
X

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 51). தனியார் நிறுவன ஊழியரான இவர் சமயபுரம் கோவில் செல்வதற்காக புள்ளம்பாடியில் இருந்து நம்பர் 1 டோல்கேட்டிற்கு பஸ்சில் வந்தார். பின்னர் பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாருதி நகர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மொபட்டில் வந்த, லால்குடி அருகே உள்ள பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் பிரேம்குமார் (வயது 20), முருகன் மகன் விஜய் என்கிற மாணிக்கம் (வயது 20) உள்பட 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி சந்துருவிடம் இருந்த ரூ.2 ஆயிரத்து 700 மற்றும் ஒரு செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பிரேம்குமார், மாணிக்கம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் வெங்கடேஷ் (வயது 20) என்பவரை தேடி வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?