/* */

திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிப்பு

திருச்சி அருகே எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிப்பு
X

திருச்சி எம்.ஆர். பாளையம் வன உயரியல் பூங்காவில் 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலயைில் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்குள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் கோழிகமுத்தியிலுள்ள முகாமில், தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட ரோகிணி என்ற 60 வயது யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த யானை சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து எம்.ஆர். பாளையத் திலுள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட வனத்துறை கோவை மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் இங்கு முகாமிட்டு யானை ரோகிணியின் உடல்நலத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் விருதுநகர் மாவட்டம். ராஜபாளையத்திலிருந்து இந்திரா என்கிற லட்சுமி என்ற 25 வயது யானையும் நேற்று முன்தினம் இரவு எம்.ஆர்.பாளையம் முகாமிற்கு பராமரிப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் 8 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Updated On: 23 Dec 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்