/* */

திருச்சி அருகே வேடிக்கை பார்க்க வந்தவர் ஆற்றில் தவறி விழுந்து பலி

திருச்சி அருகே தண்ணீர் நிரம்பியதை பார்க்க சென்ற வாலிபர் ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே வேடிக்கை பார்க்க வந்தவர் ஆற்றில் தவறி விழுந்து பலி
X

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த சிறுகனூர் திருமலையில் உள்ள பெரியகுளம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பெய்த கனமழை காரணமாக இந்த குளமானது நிரம்பி குளத்தின் கலிங்கு வழியாக நீர் ஆற்றிலே வழிந்து ஓடியது.

10 வருடங்கள் கழித்து தண்ணீர் நிரம்பி ஓடுவதை காண்பதற்கு அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இந்நிலையில் எதுமலையை சேர்ந்த சஞ்சீவிகுமார் (வயது 19) என்பவர் குளம் நிரம்பி ஆற்றில் ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேர தேடலுக்கு பின்பு சஞ்சீவிகுமார் உடலை மீட்டனர். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சீவிகுமார் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் என்பது பரிதாபமான விஷயமாகும்.

Updated On: 19 Nov 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...