/* */

திருச்சி அருகே ஆடு திருடியதாக பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி அருகே ஆடுதிருடியதாக பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே ஆடு திருடியதாக பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
X

சமயபுரம் அருகே திருடப்பட்ட ஆடு போலீசாரால் மீட்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மாடகுடியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60). இவருக்கு சொந்தமான 2 ஆடுகள் திருட்டு போயின. இது குறித்து சமயபுரம் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் ஆடுகளை திருடி திருச்சியில் விற்பனை செய்த பிச்சாண்டார் கோவிலை சேர்ந்த ஹரிஹரன் என்கிற ராஜேஷ் (வயது 21), கொள்ளிடம் நம்பர்-1 டோல்கேட்டைடை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் சமயபுரம் அருகே உள்ள பளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து ஹரிஹரன் திருச்சி மத்திய சிறையிலும், சிறுவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

Updated On: 3 Dec 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  2. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  3. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  4. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  8. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  9. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  10. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்