/* */

திருச்சி அருகே தூங்கிய பெண்ணிடம் 51/2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

திருச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 51/2 பவுன் தங்க சங்கிலி பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே தூங்கிய பெண்ணிடம் 51/2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
X

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை ஊராட்சி தெற்கு சாலப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). இருவரும் இரவு சாப்பிட்டபின் வீட்டு வராண்டாவின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் தனலட்சுமியின் கழுத்தில் இருந்த 51/2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

இதனால் திடுக்கிட்டு எழுந்த தனலட்சுமி அந்த ஆசாமிகளை பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அந்த ஆசாமிகள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியின் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  2. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  3. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  4. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  7. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  8. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  9. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு