/* */

சாலையோரம் நின்ற லாரியில் ரூ 2.25 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு

திருச்சி அருகே சாலையோரம் நின்ற லாரியில் இருந்து ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடிய, திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சாலையோரம் நின்ற லாரியில் ரூ 2.25 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு
X

பைல் படம்

சென்னை மதுராந்தகம் பகுதியில் உள்ள என்.ஜே.எஸ்.என்.ஜே.என்ற மதுபான தொழிற்சாலையில் இருந்து 975 மதுபான பெட்டிகளை ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு சிவகங்கைக்கு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு லாரியை லாரி டிரைவர் ஓட்டி வந்தார்.

அப்போது திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள டோல்பிளாசா அருகே லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றுள்ளார். பின்னர் டீ குடித்துவிட்டு வந்து அந்த லாரியை பார்த்த போது லாரியில் வைத்திருந்த ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள 36 மதுபான பெட்டிகள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து லாரி டிரைவர் செல்வம் என்பவர் சமயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபான பாட்டில்கள் திருட்டு குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Jan 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  9. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  10. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி