Begin typing your search above and press return to search.
லால்குடியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
லால்குடியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டம் லால்குடி உமர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர்.
அப்போது, உமர் நகர் பகுதியில் உள்ள பூங்கா அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் லால்குடி ஒய்.எம்.ஏ. தெருவைச் சேர்ந்த காதர் உசேன் (30) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் காதர் உசேனை போலீசார் கைது செய்தனர்.