/* */

திருச்சி அருகே கோவில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருச்சி அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

திருச்சி அருகே கோவில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு
X

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் டோல்கேட் அருகே லால்குடி செல்லும் சாலையில் தாளக்குடி கிராம கோவிலான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது கண்டு திடுக்கிட்டார்.

இதேபோல, அருகிலிருந்த மற்றொரு கோவிலான அடைக்கலம் காத்த அம்மன் கோவிலின் கதவும் உடைக்கப்பட்டு சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், கொள்ளிடம் நெம்பர் 1 டோல்கேட் காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 26 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  2. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  3. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  4. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!