திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
X
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 38). டிரைவரான இவருக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்த பிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business