வெள்ளிப்பதக்கம் பெற்ற திருச்சி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
X
தேசிய அளவில் நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மாணவர் முகமது ஜமால் பாஷாவிற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பாராட்டு தெரிவித்தார்.
By - R.Ponsamy,Sub-Editor |19 April 2022 8:47 PM IST
தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற திருச்சி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்ற திருச்சி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் முகமது ஜமால் பாஷா இளநிலை பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu