/* */

வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த ஆந்திர வாலிபர் கைது

வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த ஆந்திர வாலிபர் கைது
X

திருச்சி நெம்பர்.1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தனது மனைவிக்கு வேலைக்காக இணையதளத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர்ரெட்டி (வயது 27) என்பவர் இணையதளம் மூலம் கிருஷ்ணகுமாரிடம் அறிமுகமானார்.

அவர் உங்கள் மனைவிக்கு பிரபல தனியார் நிறுவனத்தில் நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். அதை நம்பி பல தவணைகளாக ரூ.29 லட்சம் வரை கிருஷ்ணகுமார் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரவிசங்கர் ரெட்டி வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கிருஷ்ணகுமார் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ரவிசங்கர் ரெட்டியைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சென்று அங்கு பதுங்கியிருந்த ரவிசங்கர் ரெட்டியை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் ஸ்ரீரங்கம் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 7 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!