திருச்சி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு தொற்று

திருச்சி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு தொற்று
திருச்சி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு தொற்று உறுதியானது, 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 11 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 நபர்களும் குணமடைந்தனர். மாவட்டத்தில் 144 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். திருச்சி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story