/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் 26% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 26% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என தெரிவித்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் 26% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்.
X

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 26 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி பேயன்விளை, பரமன்குறிச்சி, நாசரேத் பேரூராட்சி, குரங்கணி ஆகிய பகுதிகளில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- தமிழக முதல்வர், கொரோனா தொற்று நோயை தமிழகத்தில் முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தினமும் சுமார் 9500 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை 10 ஆயிரத்தும் மேற்பட்ட நபர்களுக்கு அதிகப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தில் தற்போது 26 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக தடுப்பூசியை போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி நம்முடைய உயிரை காக்கக்கூடியது.

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பரவலை தடுத்திட வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும் எவ்வித அச்சமும் இன்றி கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசின் ஊரடங்கு விதியை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். சுகாதார பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், காயாமொழி குளத்தினை பார்வையிட்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளத்தினை தூர்வாறி ஆழப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 31 May 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க