/* */

திருச்செந்தூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருச்செந்தூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல். போக்குவரத்து பாதிப்பு.

HIGHLIGHTS

திருச்செந்தூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
X

திருச்செந்தூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் அருகே, குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிலோமிநகர் அடுத்த சுனாமி நகர் பகுதியில் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் திருச்செந்தூர்- அடைக்கலாபுரம் சாலையில் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 50 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். சாலைமறியல் குறித்து தகவலறிந்து வந்த திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ண ராஜா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் நாளை மாலைக்குள் குடிநீர் முறையாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் திருச்செந்தூர் - அடைக்கலாபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 20 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...