மைனர் பெண்ணை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது!

மைனர் பெண்ணை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது!
THOOTHUKUDI-Minor girl abducted married Youth arrested under Pokso Act!

தூத்துக்குடி அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை நடுவக்குறிச்சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமர் மகன் மகேஸ் (20), லாரி கிளீனராக வேலைபார்த்து வருகிறார். இவர் 17வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமண ஆசைகாட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், நேற்று அந்த சிறுமியை கடத்திச் சென்று திருச்செந்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டாராம். இதுகுறித்து சிறுமியின் தாயார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மகேஸை கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும், போக்ஸோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் விமலா வழக்குப் பதிவு செய்துள்ளார்.

Tags

Next Story