/* */

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாளையுடன் ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் தொழில்நுட்ப ரீதியாக இன்று ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி நிறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது
X

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாளையுடன் ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் தொழில்நுட்ப ரீதியாக இன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி நிறுத்தப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி மாதம் தீவிரமடைந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான மரணங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, தமிழக அரசால் மூடப்பட்ட, தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதனை தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகில் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. அங்கு உற்பத்தி செய்யப்பட்ட திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அலகுகளின் மூலம் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்று கூறி அதற்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஜூலை 31ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நாளையுடன் நிறைவடைய உள்ளதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தொடர்ந்து அனுமதி வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நாளையுடன் அனுமதி முடிவடையவுள்ளதால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.






Updated On: 30 July 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது