/* */

கோவில்பட்டியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

கோவில்பட்டியில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்ரமணியபுரம் 2வது தெருவில் வசித்து வருபவர் பால்பாண்டி மகன் முருகேசன் (28). இவர் வடக்கு அச்சங்குளத்தில் தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை .

அவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் . அவரது தந்தை சென்னையில் உள்ளார். தாயார் தீப்பெட்டி ஆபீஸில் வேலைக்கு சென்ற நேரத்தில் இவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 5:34 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்