/* */

கோவில்பட்டியில் மாணவி கடத்தல்: இளைஞர்கள் நால்வர் அதிரடி கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் மாணவி கடத்தல்: இளைஞர்கள் நால்வர் அதிரடி கைது
X

பைல் படம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவருக்கும் பிளஸ்-2 படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி அந்த மாணவியை கார்த்திக் கடத்திச் சென்றார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வாலிபரிடம் இருந்து அந்த மாணவியை மீட்டனர். அவரை கடத்திய கார்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மகாராஜா (23), செண்பகராஜ் (27), மாரிமுத்து (19) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்தனர்.

இதில் பள்ளி மாணவியை கடத்திய கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Updated On: 20 Sep 2021 6:22 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்