/* */

திருவாரூர் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவாரூரில் நாளை நடைபெற உள்ள தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடுகளை ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு.

HIGHLIGHTS

திருவாரூர் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
X

திருவாரூரில் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடுகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் நேரில் ஆய்வு செய்தனர்.

திருவாரூரில் நாளை நடைபெற உள்ள தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடுகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டமானது நாளை (15.03.2022) காலை 8.10 மணியளவில் வடம்பிடித்து தொடங்கி வைக்கப்படுகிறது. 96 அடி உயரம், 300 டன் எடையுடன் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் அலங்கரிக்கப்படுகிறது.

இத்தேரோடத்தினையொட்டி துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காவல்துறை பொருத்தமட்டில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 14 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நகராட்சி சார்பில் 270 பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளனர். பொது மக்கள் பயன்பாட்டிற்காக 6 இடங்களில் 12 பிரிவுகளாக கழிவறை வசதிகளும், 6 இடங்களில் குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையின் சார்பில் 4 வட்டாட்சியர்களும், 9 வருவாய் துறை பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தீயணைப்புத்துறையினர் தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டி, ஒன்றினை தேரினை தொடர்ந்து வர செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறையின் சார்பில் 13 உதவி மருத்துவர்கள் 6 சுகாதார ஆய்வாளர், 2 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் அடங்கிய மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன் மற்றும் அரசுதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2022 1:44 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  4. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  5. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  6. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  9. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  10. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...