/* */

உளுந்து சாகுபடி குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி கிராமத்தில் வரப்பில் சாகுபடி செய்த உளுந்து பயிரை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார்

HIGHLIGHTS

உளுந்து சாகுபடி குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி கிராமத்தில் வரப்பில் சாகுபடி செய்த உளுந்து பயிரை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார்

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சம்பா, தாளடி 1,47,285 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், வரப்பு உளுந்து சாகுபடியினை பொறுத்தவரை கடந்த ஆண்டில் 5,830 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 8,382 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு இரண்டு மடங்கு கூடுதல் சாதனையாகும். வரப்பு உளுந்து சாகுபடி செய்யும் போது விவசாயிகளுக்கு நெற்பயிருடன் கூடுதல் வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்யப்படும்போது நெற்பயிரினை தாக்கும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் பொறிப்பயிராக செயல்பட்டு நெற்பயிரினை தாக்கும் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், வரப்பு உளுந்து சாகுபடி செய்யும்போது நெற்பயிருக்கு பாய்ச்சும் நீரில் சிறிதளவு எடுத்துக்கொண்டு வரப்பு உளுந்து மூலம் ஒரு ஹெக்டருக்கு 100-150 கிலோ மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் வரப்பு பயிரினை தீவிரமாக சாகுபடி செய்து வருகின்றனர். எனவே, அனைத்து விவசாயிகளும் வரப்பு பயிராக உளுந்தினை சாகுபடி செய்து பயனடையுமாறு என்றார் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்.

இந்நிகழ்வில் வேளாண் துறையின் இணை இயக்குநர் சிவகுமார், வேளாண் துறையின் துணை இயக்குநர்கள் உத்திராபதி, ரவீந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்ளிட்ட வேளாண்மைதுறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 2 Feb 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!