/* */

உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்

திருவாரூர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

திருவாரூர் காணூர் பகுதியில் உள்ள மாவட்ட சோதனைசாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் .அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரியை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் 305 நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல முயன்றதையடுத்து திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வட்டாட்சியர் கடத்த முயன்ற லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் பகுதியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் 182 நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசு நெல் மூட்டைகள் ஏற்றி செல்ல அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே செல்ல அனுமதி அளித்துள்ளது. நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஒரேநாளில் திருவாரூர் வட்டாட்சியர் 484 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Jan 2022 6:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  5. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  7. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  9. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  10. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!