திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

திருவாரூர் மாவட்ட விவசாயிகள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பிரச்சினைகள் விவசாயிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முயற்சிக்கும் இந்த சமயத்தில் கூட மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் கூட்டத்தை கூட்ட முன்வராதது கண்டித்து விவசாயிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர் .

இந்தக் கூட்டத்தில் வேளாண் துறை இணை இயக்குனர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மற்றும் ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!