Begin typing your search above and press return to search.
ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழாவில் ஒமிக்ரான் ஒழிய சிறப்பு தொழுகை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழாவில் ஒமிக்ரான் ஒழிய சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை-உலக பிரசித்தி பெற்ற ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 720 வது ஆண்டு கந்தூரி விழாவில் கடந்த 5 ம் தேதி கொடி ஏற்றப்பட்டது .
இதனை தொடர்ந்து இன்று தர்காவிலிருந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்து அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலாஷரிபுக்கு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது.
முன்னதாக கொரோனா, ஒமிக்ரான் போன்ற நோய்கள் ஒழியவும் மக்கள் அனைவரும் நலமாக வாழவும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு வளம் பெறவேண்டும் என சிறப்பு தொழுகை நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.