/* */

ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு

ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு.

HIGHLIGHTS

ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு
X

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு திமுக நகர செயலாளர் பாண்டியன் தங்க மோதிரம் பரிசளித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திமுக நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் வீதம் 20 குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் வழங்கினார். மேலும் பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் 150 நரிக்குறவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளும் 3 பேருக்கு சலவை பெட்டியும் வழங்கப்பட்டது.

இதேபோல் முத்துப்பேட்டையில் பேரூர் கழக செயலாளர் கார்த்திக் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஏழை,எளியோர் மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் .

Updated On: 1 March 2022 10:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...