/* */

அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் வழிபாடு.

தமிழக அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் செவ்வாய்க்கிழமைத் தோஷ நிவர்த்தி வழிபாடு செய்தார்

HIGHLIGHTS

அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஸ்ரீவாஞ்சியம் கோயிலில்  வழிபாடு.
X

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம் கிராமத்தில், எமதர்மராஜா, சித்திரகுப்தர் தனி சன்னதியில் எழுந்தருளிப் பக்தர்களின் எமபயம் மற்றும் பைரவ உபாதையை போக்கிடும் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதசுவாமிக் கோயில் உள்ளது.

இக்கோயிலில் பிலவ ஆண்டு சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை, வளர்பிறை அசோகாஷ்டமி தினத்தில், தமிழக கால்நடை நலத்துறை அமைச்சர் உடுமலை கே.இராதாகிருஷ்ணன் வருகைத் தந்து, எமதர்மராஜா, சித்திரகுப்தர் சன்னதியில் சிறப்புப் பூஜைகள் செய்து, ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதசுவாமிக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்து தோஷ நிவர்த்திக்காக வழிபாடு நடத்தினார்.

அமைச்சருக்குக் கோயில் சிவாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி வரவேற்பளித்தனர். ஸ்ரீவாஞ்சியம் வருகைதந்த அமைச்சருக்குக் கீழ்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளர் கே.கே.சாகேஸ்வரன், நன்னிலம் நகரத் தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் செல்.சரவணன் மற்றும் கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Updated On: 21 April 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது