/* */

குடவாசல் அருகே தூக்கிட்டு பெண் சாவு கணவர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருமணமாகி நான்கு மாதம் ஆன நிலையில் பெண் தூக்கிட்டு மரணமடைந்ததால் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குடவாசல் அருகே தூக்கிட்டு பெண் சாவு  கணவர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது
X

நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் ஆன அனுசியா திருமணத்தின் போது கணவர் அருண்குமாருடன் எடுத்த புகைப்படம்.



திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருமணமாகி நான்கு மாதம் ஆன நிலையில் பெண் தூக்கிட்டு மரணமடைந்ததால் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள உத்திரங்குடி கிராமம் கீழத்தெருவில் திருமணமாகி நான்கு மாதம் ஆன நிலையில் அனுசியா (24) என்ற பெண் தூக்கிட்டு இறந்துள்ளார். கணவர் மற்றும் மாமியார்,கொடுமை காரணமாக தூக்கிலிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதையொட்டி கணவர் மற்றும் கணவரின் அண்ணன் என இருவரை காவல் துறை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

குடவாசல் அருகில் உள்ள உத்தரங்குடி கிராமத்தில் அனுசியா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக குடவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அனுசியா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதனைக்கேட்ட அனுசியாவின் உறவினர்கள் அழுதுகொண்டே கூறும்போது அனுசியா காணவரும், அவரின் அண்ணனும் சேர்ந்து அடித்து தூக்கில் போட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள் என கதறி அழுதனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் போலீஸ் டி.எஸ்.பி. இளங்கோவன் விசாரணை மேற்கொண்டு கணவர் அருண்குமார் (28) மற்றும் கணவரின் அண்ணன் பிரேம்குமார் (30) ஆகியோரை கைது செய்து விசாரணைக்கு உத்தரவிட்டார். உடனடியாக குடவாசல் காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

இறந்து போன பெண்ணின் உடலைக் கைப்பற்றி திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. திருமணமாகி நான்கு மாதம் ஆன நிலையில் திருமணப் பெண் இறந்த செய்தி அறிந்த அந்தப் பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். உரிய விசாரணை செய்து இதற்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஊர் மக்கள் கூறினர்.

Updated On: 30 Jun 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?