/* */

மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

திருவாரூர் அருகே மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது டிரைவர் உயிர் தப்பினார்

HIGHLIGHTS

மது பாட்டில்கள் ஏற்றி வந்த  லாரி கவிழ்ந்தது
X

திருவாரூர் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அமராவதி வெட்டாறு பாலம் உள்ளது. சம்பவத்தன்று இரவு மன்னார்குடியில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி இந்த பாலத்தின் வழியாக காஞ்சீபுரம் நோக்கி சென்றது. லாரி பாலத்தின் அருகே உள்ள பஸ்நிறுத்தம் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. ஆனால் லாரியில் ஏற்றி இருந்த மதுபாட்டில்கள் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்ததால் மதுபாட்டில்கள் சிதறாமல் அப்படியே இருந்தன. மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Updated On: 21 April 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு