Begin typing your search above and press return to search.
வெளிநாடு செல்ல அனுமதிக்காததால் வாலிபர் துாக்கு மாட்டி தற்கொலை
தேனி அருகே, வெளிநாடு செல்ல தாய் அனுமதி தராததால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
தேனி அருகே கொடுவிலார்பட்டி அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் தாமோதரன், 25. இவரும், இவரது தாய் சூர்யாவும், 43 தேனியிலும், பெங்களூருவிலும் நாப்கின் தயாரிப்பு கம்பெனி வைத்துள்ளனர். இதனை நிர்வகித்து வந்தனர்.
இந்நிலையில் தாமோதரன் வெளிநாடு செல்ல விரும்பினார். ஆனால் அதற்கு அவரது தாய் சூர்யா அனுமதிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து தன் வீட்டு மாடியில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.