தமிழ்நாடு முழுவதும் தீவிரமான வாகன சோதனை

தமிழ்நாடு முழுவதும் தீவிரமான வாகன சோதனை
தமிழ்நாடு முழுவதும் புதிய வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக அபராதம் விதிக்கப்படுகிறது

தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதம் பெரும் அளவில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் சிக்கி பெரும் அளவில் அபராதம் செலுத்தி வருகின்றனர். எந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம் என்பதை காணலாம்.

இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது: புதிய வாகன சட்டத்தின்படி ரோடுகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் வரும் போது வழிவிடத்தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை இயக்கினால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும். செல்போன் பேசிக் கொண்டோ, அதி வேகமாகவோ வாகனம் ஓட்டினால், முதல் முறை ரூ.1000, இரண்டாவது முறையிலிருந்து *ரூ.10,000* வரை அபராதம்.

பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம். தேவையில்லாமல் அதிக ஹரான் மற்றும் அதிக சத்தம் எழுப்பினால் ரூ.1,000 அபராதம். காப்பீடு இல்லாத வாகனத்தை இயக்கினால், இனி 2,000-க்கு பதில் ரூ.4,000 அபராதம் விதிக்கப்படும். வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும்.

அதிகாரிகளிடம் தவறான தகவல் அளித்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.கார்கள், ஜீப்புகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். இரு சக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் இருந்தால் முதல் முறை ரூ.500, இரண்டாம் முறை ரூ.1500 அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் மற்றும் பின்னால் இருப்பவர் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

போக்குவரத்து சிக்னலை மதிக்காமல், சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500, இரண்டாவது முறை ரூ.1500 அபராதம் விதிக்கப்படும். வாகன ஓட்டுநர் மதுபோதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் மதுபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரிடமும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு தினமும் தமிழகத்தில் வாகன சோதனை நடந்து வருகிறது. வாகன ஓட்டிகளே விதிகளை கடைபிடித்து அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றனர்..

Tags

Next Story