/* */

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் நடவடிக்கை- வணிகர் சங்க பேரவை

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் நடவடிக்கை- வணிகர் சங்க பேரவை
X

தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் செல்வக்குமார்.

தேனி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள், போதை பாக்கு விற்பனை செய்பவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் செல்வக்குமார் கூறுகையில், தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் உள்ளனர். இவர்களில் யாரும் புகையிலை பொருட்கள், போதை பாக்கு உட்பட பொதுமக்களுக்கு கேடு தரும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அப்படி விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் அவர்கள் மீது எடுக்கும் சட்ட நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற வணிகர் சங்க பேரவை எந்த நடவடிக்கையும் எடுக்காது. இது குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 28 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  2. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  4. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  5. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  7. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  8. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  10. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...