Begin typing your search above and press return to search.
ஆண்டிபட்டியில் வேன் கார் மோதல் 4 பேர் பலி: 12 பேர் பலத்த காயம்
தேனி அருகே ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுாரில் காரும் வேனும் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். 12 பேர் பலத்த காயமடைந்தனர்
HIGHLIGHTS
மதுரை செக்காணுாரணியை சேர்ந்த சிலர், காரில் கம்பத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த முருகபிரபு ஓட்டிச் சென்றார். ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுாரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி அருகே இவர்களது வேன் சென்ற போது எதிரே வந்த கார் மீதும், சுற்றுலா வேன் மீதும் மோதியது.
இச்சம்பவத்தில் செக்காணுாரணியை சேர்ந்த செல்வம்(55,) சிவபாண்டி( 48,), முருகபிரபு( 44 )ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பாண்டியராஜன் என்பவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். எதிரே வந்த கார், வேனில் இருந்த 12 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.