/* */

சொத்து வரி ரசீதுக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் கைது

பூமலைக்குண்டு ஊராட்சியில், சொத்து வரி ரசீது வழங்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சொத்து வரி ரசீதுக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் கைது
X

பைல் படம்.

தேனி தர்மாபுரியை சேர்ந்தவர் அருள்குமார் 26. கோழிப்பண்ணை உரிமையாளரான இவர் பூமலைக்குண்டு கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் 3.5 ஏக்கரில் கோழிப்பண்ணை அமைத்தார். அங்கு கட்டடம் கட்டினார். மின் இணைப்பு பெற ஊராட்சி நிர்வாகத்திடம் சொத்து வரி ரசீது கேட்டார். ஊராட்சி செயலாளர் செந்தில் ஆண்டவர் 37, ஊராட்சி தலைவியின் கணவர் முருகன் ஆகியோர் 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.

இது பற்றி தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் அருள்குமார் புகார் செய்தார். போலீசார் 12 ஆயிரம் ரூபாய் வேதிப்பொருள் தடவிய நோட்டினை கொடுத்து லஞ்சம் கொடுக்குமாறு அருள்குமாரிடம் அறிவுறுத்தினர். அருள்குமார் இந்த பணத்தை முருகனிடம் கொடுத்தார். அப்போது போலீசார் கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் செந்தில் ஆண்டவருக்கும் பங்கு இருப்பது தெரிந்ததால், முருகனையும், செந்தில் ஆண்டவரையும் கைது செய்தனர். மேலும் சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் செந்தில் ஆண்டவரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார்.

Updated On: 14 April 2022 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  7. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  8. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  9. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  10. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...