/* */

கூடலூரில் புகையிலை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த இருவர் கைது

தேனி மாவட்டம் கூடலூரில் புகையிலை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

தேனி மாவட்டம், கூடலூர் நகர் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளின் அருகே போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் பிச்சை பாண்டி தலைமையில் கூடலூர் வடக்கு தெற்கு காவல் நிலைய போலீசார் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலத்தை நடத்தினர். இதன் பின்பும் பள்ளியின் அருகே போதைப்பொருள்களை விற்பனை செய்வதாக பள்ளி மாணவர்கள் போலீசாருக்கு ரகசிய தகவலினை அளித்தனர். தகவலை தொடர்ந்து நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர்.

புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டி, கூடலூர் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 29 Aug 2022 2:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...