/* */

கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

கோயிலுக்கு செல்வதாக கூறி பெண்களிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்த 2 பேரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக  கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த இருவர் கைது
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த சந்திரசேகர் மனைவி பாரிஜாதம் (வயது 57.) ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், ஆன்மீக சுற்றுலா தளத்திற்கு செல்ல முடிவு செய்தார். கேத்தார்நாத், பத்ரிநாத் செல்ல இணையத்தில் வந்த நம்பரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் ரயில் மூலம் அழைத்துச் செல்ல ஒரு பெட்டிக்கு 72 பேர் தேவை எனக்கூறி உள்ளனர். பாரிஜாதம் 90 நபர்களிடம் 4 லட்சத்து 800 ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளார். திரும்ப அவர்களிடம் இருந்து எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. இது குறித்து பாரிஜாதம் தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். தேனி சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பாரிஜாதத்திடம் பணத்தை ஏமாற்றியவர்கள் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஹேமாமாலினி( 47,) மும்பை சான்பாஜி நகரை சேர்ந்த வெங்கட்ரமணன்,( 60 ) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 3 Aug 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...