/* */

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் நடந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்.

பெரியகுளம் கீழவடகரை போடன்குளத்தில் வசித்தவர் கண்ணன் (வயது 47). இவர் வேட்டவராயன் தெருவில் உள்ள தனியார் வீட்டில் இருபது அடி உயரத்தில் நின்று கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த கண்ணன் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தேனி அன்னஞ்சி ஊஞ்சாமம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நவநீதன், (வயது 45). இவர் தனது தோட்டத்தில் மோட்டார் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது தவறி 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்து இறந்தார். தேனி தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டனர். அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவதானப்பட்டி புதுாரை சேர்ந்தவர் சந்திரன், (வயது 51). இவர் மஞ்சளாறு அணை ரோட்டில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். டூ வீலரில் எதிரே வந்த உசிலம்பட்டியை சேர்ந்த கார்த்திக், (வயது 21) இவர் மீது மோதினார். பலத்த காயமடைந்த சந்திரன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 March 2022 5:32 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு