/* */

மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு 24 மணி நேரம் இடைவிடாத அன்னதானம்

அடர்ந்த வனத்தின் நுழைவுப்பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள இந்த சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது

HIGHLIGHTS

மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு  24 மணி நேரம் இடைவிடாத அன்னதானம்
X

தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் இரவு நேர தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

தேனி நகராட்சியில் இருந்து 8 கி.மீ., தொலைவில் மலையடிவாரத்தில் உள்ளது வீரப்அய்யனார் கோயில். அடர்ந்த வனத்தின் நுழைவுப்பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள இந்த சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத்தொடங்கினர். இன்று காலை 6 மணி வரை இடைவிடாமல் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். ஒநே நாளில் பல லட்சம் பக்தர்கள் வந்ததால் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு மிகவும் நெரிசலுடன் காணப்பட்டது. கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 500 மீட்டர் துாரத்திற்கு வரிசையாக காத்து நின்றனர். சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒண்ணரை மணி நேரம் வரை காத்திருந்தே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. இருப்பினும் பக்தர்கள் பொறுமையாக சாமி தரிசனம் செய்தனர்.

அல்லிநகரம் கிராம கமிட்டி, கோயில் விழாக்கமிட்டி சார்பில் காலை 6 மணிக்கு தொடங்கிய அன்னதானம் காலை 6 மணி வரை நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்ர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.

Updated On: 2 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்