/* */

தேனி -பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா சேதம்: 6 பேர் மீது வழக்கு

தேவாரம் பேரூராட்சி கண்காணிப்பு கேமரா, டியூப் லைட்களை சேதப்படுத்திய 6 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

HIGHLIGHTS

தேனி -பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா சேதம்: 6 பேர் மீது வழக்கு
X

தேனி மாவட்டம், தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து கண்காணிப்பு கேமரா, டியூப் லைட்களை சேதப்படுத்திய 6 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில் வேலை நேரம் முடிந்த பின் அனைவரும் சென்றுவிட்ட நிலையில் காவலாளி மட்டும் இருந்துள்ளார். மாலையில் சிலர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காலியிடத்தில் மது அருந்த வந்துள்ளனர். அப்போது அவர்களை காவலாளி தடுத்து திருப்பி அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து, சிறிது நேரத்தில் மது அருந்து விட்டு வந்த தேவாரம் சாலை தெருவை சேர்ந்த அழகேசன் மகன் முகேஷ் மற்றும் 5 நபர்கள் சேர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் 4 டியூப் லைட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இதுகுறித்து தேவாரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார், தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகேஷ் உள்ளிட்ட 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது