/* */

தேனி: மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

போடிநாயக்கனூரில் கொரோனா சிகிச்சை மைய கழிவுகளை பொதுவெளியில் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி: மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
X

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கொரோனா சிகிச்சை மைய கழிவுகளை பொதுவெளியில் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போடிநாயக்கனூர், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி விடுதி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் உடைகள், முகக்கவசம், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்டவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தின் பின்புறம் குழி தோண்டி புதைக்கப்படுவது வழக்கம். கடந்த 10 நாட்களுக்கும் மேலான நிலையில் குழி தோண்டுவதற்கும், புதைப்பதற்கும் வாகனம் கொண்டு வரப்படாத நிலையில் கொரோனா சிகிச்சை மைய கழிவுகள் குவியலாக தேங்கிக் கிடக்கிறது. இதில் காற்று வீசுவதால் முகக்கவசம் உள்ளிட்டவை காற்றில் வேறு இடங்களுக்கு பறந்து செல்கிறது. கழிவுகளுடன் உணவு பொருட்களும் சேர்ந்துள்ளதால் நாய், பன்றி போன்றவை கழிவு பொருட்களை கலைத்து விடுகின்றன.

இதனால் கழிவுகள் வேறு இடங்களுக்கும் பரவி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள போடி, தருமத்துப்பட்டி, ரெங்கநாதபுரம், மேலச்சொக்கநாதபுரம், வினோபாஜி காலனி உள்ளிட்டபொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா சிகிச்சை மைய கழிவுகளை முறையாக அகற்றவோ, அழிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 5 Jun 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...