தேனி மாவட்டத்தில் புதியதாக 40 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

தேனி மாவட்டத்தில் புதியதாக 40 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
X
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில், 40 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்தில் நேற்று 2474 பேர் நோய் தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் மிகப்பெரும்பாலானோருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருக்கலாம் (ஒமிக்ரான் உறுதி செய்ய குறைந்தபட்சம் 5 நாட்கள் இடைவெளி தேவைப்படும்) என மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2 பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர் என தேனி மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
how ai is used in education