/* */

தடுப்பு சுவரில் அமர்ந்தவர் தவறி விழுந்து இறப்பு

போடி அருகே உள்ள பாலம் தடுப்புச்சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தடுப்பு சுவரில் அமர்ந்தவர் தவறி விழுந்து இறப்பு
X

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள பாலம் தடுப்புச்சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போடி அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜ் மகன் ஜெகநாதன் (40). இவர் நடை பயிற்சி சென்று விட்டு, தனது வீட்டருகே உள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், திடீரென நிலை தடுமாறி 16 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். இதில் முதுகு தண்டில் அடிபட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமலைராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Jun 2021 4:41 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்